முகப்பு
தமிழ்நாடு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் தொடர்பாக பேரவைத் தலைவர் முடிவு...

Updated On : 9 ஜூன் 2026, 1:10 pm IST
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - EPS
பகிர்:

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இரு அணிகளும் ஒன்றிணைந்தது.

கடந்த மே 27 அன்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர், கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி. வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் நேரில் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜே.சி.டி. பிரபாகரன், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

summary

No disqualification of AIADMK MLAs — Assembly Speaker JCD Prabhakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.