தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?
தவெகவின் தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா என்பது பற்றி....
தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் இன்று (ஜூன் 30) வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.
ஆகையால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தவெக சார்பில் நடத்தப்படவுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக, ஐயூஎம்எல், மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுகப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோரை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து இன்று அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Left-wing parties—the Communist Party of India (CPI) and the Communist Party of India (Marxist) (CPI(M))—announced on Tuesday (June 30) that they would not participate in the thanksgiving meeting for alliance partners organized by TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.