தவெக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா? பிரவீண் சக்ரவர்த்திக்கு பெ. சண்முகம் கண்டனம்!
தவெக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டையும் சேர்த்து குறிப்பிட்ட பிரவீண் சக்ரவர்த்தியின் பதிவுக்கு பெ. சண்முகம் கண்டனம்.
தவெக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் (சிபிஐ(எம்)) சேர்த்து குறிப்பிட்டது தவறானது என்று பிரவீண் சக்ரவர்த்தி வெளியிட்ட பதிவுக்கு, சிபிஐ(எம்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான குரலாக ஒலிப்பேன் என அவர் உறுதியளித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ.) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இது குறித்து பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை.
தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரவீண் சக்ரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் பெ. சண்முகம்.
P. Shanmugam, the Tamil Nadu State Secretary of the CPI(M), condemned a post by Praveen Chakravarty on Friday that erroneously included the Communist Party of India (Marxist) in the TVK alliance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.