தொழில்நுட்பத்தின் அடிப்படை செமிகண்டக்டர் : எஸ். கிருஷ்ணன்
கல்விச் சிந்தனை அரங்கில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் பேசியது குறித்து..
தமிழ்நாடுதொழில்நுட்பத்தின் அடிப்படை செமிகண்டக்டர் : எஸ். கிருஷ்ணன்
கல்விச் சிந்தனை அரங்கில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் பேசியது குறித்து..
தொழில்நுட்பத்திற்கான அடிப்படை செமிகண்டக்டர் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இதில், மாற்றத்திற்கான தொழில்நுட்பம் : இந்தியாவின் செமிகண்டக்டர் புரட்சி என்ற தலைப்பில் எஸ். கிருஷ்ணன் பேசியதாவது:
''மின்னணு பொருள்களில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் செமிகண்டக்டர் மிகவும் முக்கியமானது. கரோனா காலகட்டத்தில் ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் கார்களை தயாரித்தாலும் செமிகண்டக்டர் இல்லாததால், அவற்றை இயக்க முடியவில்லை. ஆலைகளில் இருந்து வாகனங்கள் வெளியே வராததற்கு செமிகண்டக்டர் முக்கிய காரணம்.
நாட்டில் பல பெரிய நிறுவனங்கள் செமிகண்டக்டர் வடிவமைப்பை மேம்படுத்த ஆய்வு மையங்களைக் கொண்டுள்ளன. செமிகண்டக்டர் உற்பத்தி வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றப் பாதையில் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.