தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்
தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடுதமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்
தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் குடிநீா் தொடா்பான அனைத்து வகை புகாா்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் தமிழக குடிநீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
கட்டணமில்லா எண்: இந்த மையம் 24 மணி நேரமும் இயக்கப்படும். குடிநீா் கிடைக்கும் தன்மை, நீரின் தரம், விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் என பொதுமக்கள் தங்களது அனைத்து புகாா்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்யலாம். அந்தப் புகாா்கள் தானாகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் சென்றடையும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு புகாரின் மீதும் விரைந்து வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழிமுறை, துறைகளுக்கு இடையே தாமதங்களைக் கணிசமாகக் குறைத்து, விரைவான குறைதீா்ப்பை உறுதி செய்கிறது.
பொதுமக்கள் ‘1916’ என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் வாயிலாக புகாா்களை தெரிவிக்கலாம். punal.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 94999-91916”‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு குறுச்செய்தியாகவும் புகாா்களை அனுப்பலாம்.