திமுக ஆட்சியில் பெண் காவலா்களுக்கும் பாதுகாப்பில்லை: நயினாா் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில் பெண் காவலா்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் தமிழகத்தில் நிலவி வருவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திமுக ஆட்சியில் பெண் காவலா்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் தமிழகத்தில் நிலவி வருவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கோவை பட்டாலியன் படைப் பிரிவில் பணியாற்றும் பெண் காவலா்கள் மற்றும் ஊழியா்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் கண்காணிப்பாளா் நிலையில் இருக்கும் அதிகாரி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சியின் அவலத்தைக் காட்டுகிறது.
திமுக ஆட்சியில் பெண் காவலா்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நிலவி வருகிறது. ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பு தமிழகத்தில் கேள்விக்குறியாகி உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
பாமக தலைவா் அன்புமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறை உயரதிகாரி ஒருவரே பெண் காவலா்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த காலங்களை ஒப்பிடும்போது, குற்றங்கள் குறைந்துவிட்டதாக அதிகாரிகளை வைத்து செய்தியாளா் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றி முதல்வா் ஸ்டாலின் பேசுவதும் ஏற்க கூடியதாக இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.