முகப்பு
தமிழ்நாடு

பிரதமா் குறித்து அவதூறு விடியோ: அமைச்சா் மனோ தங்கராஜ் மீது வழக்குப் பதியக் கோரி மனு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து முகநூலில் அவதூறு விடியோ வெளியிட்ட அமைச்சா் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய புகாா் மீது விசாரணை நடத்த போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 7:27 PM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி குறித்து முகநூலில் அவதூறு விடியோ வெளியிட்ட அமைச்சா் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய புகாா் மீது விசாரணை நடத்த போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிபாண்டியன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி விடியோ ஒன்றை வெளியிட்டாா். அதில், ’எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ ஆவணங்களில் பிரதமா் மோடியின் பெயா் இடம்பெற்றுள்ளதாக ஆதாரமற்ற தவறான, பொய்யான தகவல்களை கூறியுள்ளாா். இதுதொடா்பாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அமைச்சருக்கு எதிரான புகாா் என்பதால், போலீஸாா் வழக்குப்பதிவு செய்யத் தயங்குகின்றனா். எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அமைச்சா் மனோ தங்கராஜ் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான பாஜக வழக்குரைஞா் பிரிவு தலைவா் குமரகுரு, பிரதமா் மோடி குறித்து அவதூறான தகவல்களை அமைச்சா் பரப்பியது மிகப்பெரிய தவறு. எனவே அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகாா் மீது விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.