மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்: திமுக அறிக்கையை விமர்சித்த இபிஎஸ்!
பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பேன் எனக் கூறினார்கள், அதைச் செய்தார்களா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து திமுக தங்களின் அறிக்கையை தயார் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) விமர்சித்தார்.
திருநெல்வேலியில் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், மறு முறை ஏமாறா மாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைக் குறைப்பு என்று சொன்னார்களே செய்தார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
summary