முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டது குறித்து...

Updated On : 29 மார்ச் 2026, 5:09 pm IST
எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை சோதனையிடும் அதிகாரிகள் - எக்ஸ்
பகிர்:

கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 29) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலையேற்றுள்ள அதிமுக, தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாக, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிதாக இணைந்துள்ள சிங்கத் தமிழர் முன்னேற்றக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டுள்ளது.

Advertisement

Advertisement

தேர்தலையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 193 தொகுதிகளில் பிரசாரம் செய்திருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜனுடன் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிராசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தேர்தல் பறக்கும் படையிலர் அவரின் வாகனத்தை இடைமறித்து சோதனை நடத்தினர். சுமார் 15 நிமிடங்களுக்கு இந்த சோதனை நடைபெற்றது. பின்னர், பிரசார வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

summary

Flying Squad Conducts Inspection of Edappadi Palaniswamis Vehicle in kanyakumari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.