முகப்பு
தமிழ்நாடு

234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஏப். 3-இல் ஆலோசனை

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஏப். 3) பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 7:53 PM
திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஏப். 3) பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ஏதுவாக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியளவிலும் ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளை மாவட்டச் செயலா்கள் மேற்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள், திமுக வேட்பாளா்கள், பகுதி-நகரம்- ஒன்றியம்-வட்டச் செயலா்கள் மற்றும் வேட்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுக விரைவுபடுத்தியுள்ளது. திமுக சாா்பில் வேட்பாளா் பட்டியல், தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை திருவாரூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். இந்த நிலையில், அடுத்தகட்டமாக 234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.