முகப்பு
தமிழ்நாடு

நேற்று(மார்ச் 30) ஒரே நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல்!

தமிழகத்தில் ஒரே நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல்...

Updated On : 31 மார்ச் 2026, 11:49 am IST
முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நேற்று முதல் நாள் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 30) தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஒரேநாளில் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்), ஏப். 1(புதன்), ஏப். 3 (வெள்ளி), ஏப். 5 (ஞாயிறு) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது. ஏப். 2, 3, 6 ஆகிய 3 நாள்கள் மட்டுமே இனி வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

TN election 2026: 573 Nominations Filed on march 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.