அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!
காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாகவே வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் பகல் மட்டுமன்றி இரவு நேரங்களிலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதலே வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிற்பகலில் திடீரென கருமேகம் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது.
Advertisement
திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப் பகுதிகளான மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்டபகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
கடந்த இரு நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசுகிறது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.