தமிழ்நாட்டில் முதல்வர், அமைச்சர்களின் நிலை என்ன? யார் வெற்றி பெறுகிறார்?
தமிழ்நாட்டில் முதல்வரும் முக்கிய அமைச்சர்கள் சிலரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வி முகத்தையே சந்தித்து வருகிறார்கள்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறார். அந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றிருக்கிறார்.
சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தோல்வியை சந்தித்துள்ளார். சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றிருக்கிறார்.
Advertisement
திமுக ஆட்சியில் அவைத் தலைவராக இருந்த அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் எதொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையவிருக்கும் நிலையில், திமுக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.