வெற்றி பெற்ற தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
தேர்தலில் வெற்றி பெற்ற தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றி..
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், அனைத்து தவெகவினரையும் சென்னையில் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், வரலாறுகளைக் கருத்தில் கொண்டு, தவெக எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னமும் 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கோரும் நிலை தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, தன்னுடைய உறுப்பினர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அனைவரையும் சென்னை வரவழைத்து ஒரே இடத்தில் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக அல்லது அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருவது தொடர்பாக இன்று பனையூரில் தவெக தலைவர் விஜய் இல்லத்தில் கட்சியின் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Regarding the alleged plans to house the Tevaga members who won the election in Chennai..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.