தவெகவுடன் இணைந்ததால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்த கவுன்சிலர்!
தவெகவுடன் இணைந்ததால், கவுன்சிலர் பதவியைத் தவிர கட்சியின் அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்த காங்கிரஸ் கவுன்சிலர்
தவெகவுடன் இணைந்ததால், கவுன்சிலர் பதவியைத் தவிர கட்சியின் அனைத்துப் பதவிகளையும் காங்கிரஸ் கவுன்சிலர் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தது. இந்த நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் இணைந்ததால், கவுன்சிலர் பதவியைத் தவிர்த்து அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்வதாக தூத்துக்குடி கார்ப்பரேஷன் கவுன்சிலர் சந்திரபோஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த ராஜிநாமா கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தேன். நான் தூத்துக்குடியில் 1996 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி நகர்மன்ற உறுப்பினராகவும், பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
Advertisement
திமுக கூட்டணி சார்பாக 2 முறையும், காங்கிரஸ் கட்சி சார்பாக தனித்து 3 முறையும், மாமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். மேலும், காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கொரடாவாகவும் இருந்து வருகிறேன்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தியின் தவறான வழிகாட்டுதலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை நான் எடுக்கிறேன்.
எனது மாநகராட்சி கவுன்சிலர் பதவியைத் தவிர எனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று (மே 9) முதல் எனது பதவியில் இருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.