திரிணமூல் காங். கட்சிக்குத் தொடர் பின்னடைவு!மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா செய்துள்ளது குறித்து...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏராளமான கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில், மமதாவுடன் மிகவும் நெருக்கமுடைவராகக் கருதப்படும் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் புதன்கிழமை (ஜூன் 10) பிறபகல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் சமர்ப்பித்துள்ள கடிதத்தில், தனது ராஜிநாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஊழல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் தோல்வியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துள்ளதாக, சுஷ்மிதா தேவ் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, சுஷ்மிதா தேவ் தில்லியில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவைச் சந்தித்து உரையாடினார். இதனால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் மோகன் தேவின் மகளான சுஷ்மிதா தேவ், காங்கிரஸ் மகளிர் அணியின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அசாமின் சில்சார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுஷ்மிதா தேவ், 2021 ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.