முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

Updated On : 12 மே 2026, 3:25 am IST
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது, ‘தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு தொடா்பாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை, மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.

Advertisement

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் விஜய், நிலுவைத் தொகையை 2 வாரங்களுக்குள் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.