என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக தகவல் வந்தது! திருமாவளவன்
அதிமுக - திமுக கூட்டணி பேச்சு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி
அதிமுக - திமுக மற்றும் அதிலுள்ள கூட்டணி கட்சிகள் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் வந்தது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"அதிமுக - திமுக மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் என்னை முதல்வராக்க முயற்சி மேற்கொண்டதாக எனக்கும் தகவல் வந்தது. காங்கிரஸ் அதில் எந்தவகையில் தலையிட்டது என்று தெரியாது. இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவை வைத்து எங்கள் உயர்நிலைக் குழுவில் விவாதித்து அதன்பின்னர்தான் முடிவெடுத்தோம். அது தாமதமான முடிவு என்று எல்லோரும் விமர்சிக்கிறார்கள். அரசியல் கட்சி நடத்துபவர்களுக்குதான் இதுபோன்ற முடிவெடுப்பதில் உள்ள சிரமம் தெரியும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. எதிர்காலம் பற்றி யோசிக்காமல் பதவிக்காக முடிவெடுக்க முடியாது.
Advertisement
தவெகவுடன் திரைமறைவு பேரம் எதுவும் நடக்கவில்லை. அது தவறான தகவல். இடதுசாரிகள் போல நிபந்தனையற்ற ஆதரவு இருக்க வேண்டும் என்றுதான் நானும் வலியுறுத்தினேன்.
தற்போது மர்யாதைநிமித்தமாக விஜய் எங்களைச் சந்திக்க வருகிறார். விஜய்யிடம் எந்த நிபந்தனையும் முன்வைக்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியது குறிப்பிடத்தக்கது.