கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி
வெள்ளக்கோவில் அருகே கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக...
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவிலில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி உள்ளது. திருப்பூர், கரூர் மாவட்ட எல்லையான இந்த இடத்தில் காவல்துறை சோதனைச் சாவடி உள்ளது. சாலையோரம் இந்த சோதனைச் சாவடி உள்ளது.
அதிகாலை நேரத்தில் போலீஸார் பணியில் இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி, பின்னர் காவல்துறை சோதனைச் சாவடி மீதும் மோதின.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் ஒரு காவலர், கார் பயணிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Car-Lorry Collision: 6 Dead, Including Police Constable
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.