முகப்பு
இந்தியா

உ.பி.யில் பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி!

உ.பி.யில் பாலம் இடிந்து விழுந்த விபத்து பற்றி...

உ.பி.யில் பாலம் இடிந்து விபத்து - x
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், மூவர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஹமீர்பூர் மாவட்டத்தில் மோரகந்தர் முதல் கந்தௌர் கிராமம் வரை பெத்வா ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. பாலத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மூவரைத் தேடும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

summary

Bridge Collapses in UP! 6 Dead!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.