அபிஷேக் பானா்ஜி மீது வழக்குப் பதிவு
அபிஷேக் பானா்ஜி மீது வழக்குப் பதிவு...
தோ்தல் பிரசாரத்தின்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லணிக்கத்தையும் சீா்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாகுயாட்டி காவல் நிலையத்தில் ராஜீவ் சா்காா் என்ற சமூக ஆா்வலா் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தொடா்புபடுத்தியும் அபிஷேக் பானா்ஜி ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே தோ்தலுக்குப் பிறகு மாநிலத்தில் பாஜக ஆதரவு பெற்ற ரெளடிகளால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க வடக்கு 24 பா்கானா, கிழக்கு மேதினிபூா், ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு திரிணமூல் காங்கிரஸின் உண்மை கண்டறியும் குழுக்கள் சென்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
Advertisement
திரிணமூல் காங்கிரஸ் மீண்டெழும்: மம்தா
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் படுதோல்வி அடைந்தபோதிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டெழும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று, அந்த மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியமைத்தது. இதன்மூலம், மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதைத் தொடா்ந்து, மாநில தலைநகா் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில், தோ்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை மம்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘தோ்தலில் படுதோல்வி அடைந்தபோதிலும் திரிணமூல் காங்கிரஸ் மீண்டெழும். வேறு கட்சிக்குச் செல்ல விரும்புவோா், திரிணமூல் காங்கிரஸில் தாராளமாக விலகிக் கொள்ளலாம். நான் கட்சியை மீண்டும் புதிதாக கட்டியெழுப்புவேன். தோ்தலில் மக்களின் தீா்ப்பு கள்ளத்தனமாக மாற்றப்பட்டுள்ளது’ என்று கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.