முகப்பு
தமிழ்நாடு

மும்மொழித் திட்டத்தை தவெக அரசும் எதிர்க்க வேண்டும்: கனிமொழி

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசும் மும்மொழித் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என கனிமொழி வேண்டுகோள்...

Updated On : 17 மே 2026, 8:20 pm IST
கனிமொழி - எக்ஸ்
பகிர்:

மத்திய அரசின் மும்மொழிக் கல்வித் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசும் எதிர்க்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி இன்று (மே 17) தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியதாவது:

''ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மும்மொழிக் கல்வித் திட்டத்தை திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் திமுக உள்ளது.

Advertisement

புதிதாக பதவியேற்றுள்ள அரசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மும்மொழிக் கல்வித் திட்டத்தை எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மொழித் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.'' எனக் குறிப்பிட்டார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம் நடப்பு கல்வியாண்டு முதல் இந்த மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு இந்திய மொழிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

TVK government, too must oppose the three language formula DMK MP Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.