நீட் வேண்டாம் என்பதே தவெக கொள்கை முடிவு: அமைச்சர் அருண்ராஜ்
நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என அமைச்சர் அருண் ராஜ் கருத்து...
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இன்று (மே 19) தெரிவித்தார்.
மருந்து விற்பனையாளர்கள் நாளை (மே 20) கடையடைப்பு அறிவித்த நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையுடன் இணைந்த மருந்தகங்கள், தனியார் என சுமார் 5,000 மருந்தகங்கள் நாளை திறந்திருக்கும்
Advertisement
Advertisement
தமிழகம் முழுவதும் 50,000 மருந்தகங்கள் உள்ள நிலையில், 5,000 கடைகள் நாளை இயங்கும்.
மருத்துவ உதவிக்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி இயக்குநரின் கீழும் 2 மருந்து ஆய்வாளர்கள் இதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருந்தகங்கள் வைத்துள்ள கோரிக்கையானது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதே எங்களின் கொள்கை முடிவு எனக் குறிப்பிட்டார்.
TVKs Stance Is That NEET Is Not Wanted: Minister Arunraj
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.