விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!
தமிழக அமைச்சரவையில் முதல்முறையாக இடம்பெறும் விசிக, ஐயுஎம்எல்...
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) நடைபெற்றது. புதியதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமில்லாது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அடுத்ததாக இணைந்துள்ளது.
Advertisement
Advertisement
பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஷாஜகான், அவருடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து திண்டிவனம் எம்எல்ஏ வன்னி அரசும் வெள்ளிக்கிழமை (மே 22) அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (மே 22) காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். வி. அர்லேகர் புதிதாகப் பதவியேற்பவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Governor R.V. Arlekar will administer the oath of office to the newly appointed members during the swearing-in ceremony, which is scheduled to take place on Friday (May 22) at 9:30 AM in the presence of Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.