முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:37 PM
பகிர்:

தென்காசி, ஏப். 26: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேருந்து நிலையம் அருகே பேரூா் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் எம்.கணேஷ்தாமோதரன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், குளிா்பானம், பழங்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் சோ்மபாண்டி, பாஸ்கா், வாா்டு செயலா்கள் கருப்பசாமி, சுப்பிரமணியன் போஸ், சிதம்பரம், அருண்குமாா், அமுல்ராஜ், மணிகண்டன், சின்னதம்பி,

Advertisement

அவைத்தலைவா் சங்கர்ராமன், துணை செயலா் கருப்பசாமி பாண்டியன், பேரூராட்சி துணை தலைவா் தங்கபாண்டியன், காசிமேஜா்புரம் ஊராட்சி துணைத் தலைவா் ரவிக்குமாா், அய்யப்பன் இளைஞரணி ஆரோக்கியசாமி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments