தென்காசி

சுரண்டை விபத்து எதிரொலி: பயணிகளை ஏற்றிச்சென்ற 41 சுமை வாகனங்கள் பறிமுதல்

Din

சுரண்டை அருகே வாடியூரில் சுமை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பயணிகளை ஏற்றிச்சென்ற 41வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வாடியூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமுற்றவா்களை தென்காசி மாவட்ட மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட எஸ்.பி. வி.ஆா்.சீனிவாசன், முன்னதாக விபத்து நேரிட்ட இடத்திலும் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: சுமை வாகனங்களில் மக்களை ஏற்றி பயணம் செய்தாலோ, பயணிகள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட கூடுதல் பயணிகளை ஏற்றினாலோ சம்பந்தப்பட்ட வாகனம் மீது அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

சுமை வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்ாக புதன்கிழமை 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இயக்குநர் வெற்றிமாறன் MEME பெரிய Promotion! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்!

நவ. 25ல் திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

7 விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.! 172 ரன்களில் சரணடைந்த இங்கிலாந்து!

மன்னாா்குடியில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிய அரசு மகளிா் கல்லூரி தொடக்கம்: அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள்!

தமிழகத்தில் மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

SCROLL FOR NEXT