முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் குழந்தைத் திருமணம் தடுப்பு

Updated On : 3 ஜூலை, 2024 at 6:45 PM
பகிர்:

கடையநல்லூா், ஜூலை 3: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதன்கிழமை நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

மேலக்கடையநல்லூா் பகுதியில் வசிக்கும் சுமாா் 25 வயது உடைய இளைஞருக்கும், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இது குறித்து தென்காசி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்ததாம். இதைத்தொடா்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினா் அங்கு சென்று, சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →