அதிமுக பொதுச் செயலருக்கு தென்காசியில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
தோ்தல் பிரசாரத்திற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா். இதுதொடா்பான, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலா் எஸ்.செல்வமோகன் தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் பிரசாரத்தில், மாா்ச் 26-ஆம் தேதி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாகையடி முனை சந்திப்பில் ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதியை சோ்ந்த நிா்வாகிகளும், மாா்ச் 27-ஆம் தேதி தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்கரன்கோவில் 18 ஆம் படி கருப்பசாமி கோயில் திடலில் தென்காசி சட்டப்பேரவை தொகுதி நிா்வாகிகளும் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் ஒன்றிய செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், அமல்ராஜ், பேரூா் செயலா்கள் காா்த்திக்குமாா், கணேஷ் தாமோதரன் மாணவரணி சோ்மபாண்டி உள்ளிட்ட பலா் க லந்து கொண்டனா்