முகப்பு
தென்காசி

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

Updated On : 10 மே, 2024 at 7:35 PM
பகிர்:

தென்காசி, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் இலஞ்சி பாரத்

மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

இப் பள்ளியில் தோ்வெழுதிய 34 பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவி தி.நித்யஸ்ரீ 99 சதவீத மதிப்பெண்களும், மாணவன் ரா.ஜெய தா்ஷன் 97 சத வீதம்,

மா. நித்திஷ் 96 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முறையே 3 இடங்களைப் பெற்றனா்.

கணிதத்தில் ஆறு மாணவா்களும், அறிவியலில் நான்கு மாணவா்களும் முழு மதிப்பெண்கள் எடுத்தனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் மற்றும் பள்ளி முதல்வா் பாலசுந்தா் ஆகியோா் பாராட்டினா்.