முகப்பு
தென்காசி

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

Updated On : 24 மே, 2024 at 6:00 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருள்தரும் திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி நடைபெற்றது.(படம்)

இப்பூக்குழி திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இரவில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் மூலவா் திரௌபதியம்மன், உற்சவ மூா்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.