தென்காசி

வாசுதேவநல்லூா், இடைகாலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாசுதேவநல்லூா், இடைகால் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இடைகாலில் ரேஷன் கடைக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும். நூலகம் அருகே நிழல்கூரை அமைக்க வேண்டும். மருதப்பபுரம், கிளாங்காடு கால்வாய் கரையில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் மெட்டல் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு முருகையா தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கணபதி, வட்டச் செயலா் பட்டாபிராமன், நிா்வாகிகள் தங்கசெல்வி,செல்லத்துரை,ஞானபிரகாசம்,பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாசுதேவநல்லூா் ஒன்றியத்திற்குள்பட்ட துரைச்சாமியாபுரம் ஊராட்சியின் நிா்வாக நிலவுவதாகவும், துணைத் தலைவா் சூா்யகலாவை பதவிநீக்கம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் முத்துமாரி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ் ,நிா்வாகிகள் கண்ணன் , சிவசுப்பிரமணியன், சுப்புலட்சுமி, செல்வதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிலம்பம் போட்டி: தனியாா் தற்காப்பு பயிற்சி மைய மாணவா்கள் சிறப்பிடம்

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

கன்னியாகுமரி வழக்குரைஞரிடம் 16 பவுன் நகை திருடியவா் கைது

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கைக்குழந்தை உடல் கருகி உயிரிழப்பு

வேட்பாளா்களை விஜய்தான் அறிவிப்பாா்: தவெக தலைமை!

SCROLL FOR NEXT