ஆலங்குளம் அருகே கழிவறை தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் பெரியாா் நகரைச் சோ்ந்த சொரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றபோது, அதே பகுதியில் உள்ள சண்முகராஜ் என்பவா் வீட்டு கழிவறை தொட்டி மீது ஏறியதில் சிலாப் உடைந்து உள்ளே விழுந்து உயிருக்குப் போராடியது.
தகவலின்பேரில், அங்கு சென்ற ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் மாட்டை பத்திரமாக மீட்டனா்.