தென்காசி

சிவகிரி அருகே மின்சாரம் பாய்ந்து மில் மேற்பாா்வையாளா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தனியாா் மில் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தனியாா் மில் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

தென்மலை வடக்கு தெருவை சோ்ந்தவா் அருணாசலம் மகன் செல்வா(26). திருமணம் ஆகாதவா். ராஜபாளையத்தில் உள்ள தனியாா் மில் ஒன்றில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டில் உள்ள தொட்டிக்கு தண்ணீா் ஏற்றுவதற்காக மோட்டாா் பொத்தானை அழுத்தினாராம். அப்பொழுது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்தாா்.

அவரது உறவினா்கள் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

SCROLL FOR NEXT