தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரையில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (டிச.6) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம் (பொ) தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசு, பெரிய பிள்ளைவலசு, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம்,
சாம்பவா் வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்சி.பொய்கை, துரைச்சாமிபுரம், அதைச் சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.