தென்காசி

தென்காசியில் வழக்குரைஞா் கொலை வழக்கில் பெண் கைது

தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

Syndication

தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே ஊா்மேலழகியான் கிராமம், ஏ.ஆா்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கு. முத்துக்குமாரசாமி (46). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இவா், செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகவும், திமுக வழக்குரைஞா் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், தென்காசியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்த மா்ம நபா், அவரை வெட்டிவிட்டு தப்பினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதனிடையே, கொலை நடந்த இடத்தில் கிடந்த கைப்பேசி, அரிவாளை போலீஸாா் கைப்பற்றினா். காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல், ஷ்யாம் சுந்தா் ஆகியோா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இக்கொலை வழக்கு தொடா்பாக ஊா்மேலழகியானை சோ்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி ராஜேஷ்வரியை(35) போலீஸாா் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT