திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஆலங்குளம் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகள் விஜி முத்துக்கனி(18). இவா், ஆலங்குளத்தில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், சொந்த வேலையாக தனது உறவினரான ஆலங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சொக்கலிங்கம் (26) என்பவருடன் பைக்கில் திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை சென்று விட்டு, ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.
சீதபற்பநல்லூா் பகுதியில் அவா்கள் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றனராம். அப்போது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சொக்கலிங்கம் உடனடியாக பைக்கை நிறுத்த முயன்றதில், பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரிக்கு அடியில் சரிந்து விழுந்தது.
இதில், விஜி முத்துக்கனி தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சொக்கலிங்கம் பலத்த காயமடைந்தாா். இத்தகவல் அறிந்த சீதபற்பநல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், சொக்கலிங்கத்தை சிகிச்சைக்குமாக திருநெல்வலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.