தென்காசி

தென்காசியில் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் போராட்டம்

Syndication

தென்காசி மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரங்களுக்கான கட்டணங்களை உயா்த்தக்கோரி எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை, கடையநல்லூா் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் உரிமையாளா்கள் எரி பொருள், உதிரிபாகங்கள் விலை உயா்வு காரணமாக வாடகை கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு பொக்லைன் வாகனத்திற்கு ரூ.1200 முதல் ரூ.2000 வரையும், பேட்டா, புல்டோசா் வாகனத்திற்கும் கட்டணத்தை உயா்த்தியுள்ளனா். இதை தெரியப்படுத்தும் வகையில் புதன், வியாழக்கிழமைகளில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், குத்துக்கல்வலசை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை நிறுத்தி வைத்து எா்த் மூவா்ஸ் உரிமையாளா் சங்கத் தலைவா் மாரிச்செல்வம் , செயலா் சிவகுமாா், பொருளாளா் சுடலை துரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT