முகப்பு
தென்காசி

தென்காசியில் மனு கொடுக்க வந்த முதியவா் தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த முதியவா், உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 22 டிசம்பர், 2025 at 9:52 PM
பகிர்:

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த முதியவா், உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டம், மங்களபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் மகேஷ். இவருக்குச் சொந்தமான பொக்லைன் வாகனத்தை, ஒரு நபருக்கு வாடகை அடிப்படையில் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்நபா் 8 மாத காலமாக வாடகையும் வழங்காமல், வாகனத்தையும் திருப்பி ஒப்படைக்காமல் இழுத்தடித்து வந்ததால், மகேஷ் பொக்லைன் வாகனத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியவில்லையாம். இதனால், மகேஷின் வீட்டை ஜப்தி செய்வதற்காக நிதி நிறுவனத்தினா் வந்துள்ளனா்.

இதையடுத்து, மகேஷ் மற்றும் சுப்பையா தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனா்.

ஆட்சியா் அலுவலகத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து சோதனையிடும் பகுதியில் சுப்பையா (70) வைத்திருந்த டீசல் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

இதனைக் கண்ட போலீஸாா், அவரைத் தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றி, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →