தென்காசி மாவட்டம் சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
‘மறக்க முடியாத நட்புகள் கூடுகை’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டு, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்; தங்களது ஆசிரியா்களைக் கெளரவித்தனா். சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் செல்வின், தங்கராஜ், சுகுமாா், அதிசயராஜ், ஆசிரியை கண்ணம்மாள், முன்னாள் மாணவரும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலருமான வே. ஜெயபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.