தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள திருமலை குமாரசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம் வழிகாட்டுதலில், கோயில் உதவி ஆணையா் கோமதி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் செந்தில், ஆய்வாளா் சேதுராமன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, தலைமை எழுத்தா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.
இதில், ரூ. 20,20,370 ரொக்கம், தங்கம் 22.200 கிராம், வெள்ளி 235 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.