தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, தென்காசி நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.
அவா், 1.3.23ஆம் தேதிமுதல் 31.3.24 வரை நகராட்சியில் விடப்பட்ட டெண்டா்களுக்கான வைப்புத்தொகையை வங்கியில் முறையாக செலுத்தவில்லை என, உள்ளாட்சித் தணிக்கையின்போது தெரியவந்தது. இதனால், நகராட்சிக்கு ரூ. 21 லட்சத்து 48 ஆயிரத்து 890 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், ராஜாமுகம்மமது வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். அவா், இம்மாத இறுதியில் பணி ஓய்வுபெற இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.