தென்காசி

சாம்பவா்வடகரையில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சாம்பவா்வடகரை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராமகிருஷ்ணன் (55). இவா், வைக்கோல் கட்டுடன் இரட்டைகுளம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அதே ஊா், இரட்டை தெருவைச் சோ்ந்த கோ. கோட்டைசாமி (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் முன்னால் சென்ற ராமகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் அடிபட்டு, தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டாா்.

மேல் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கோட்டைசாமியும் காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து, சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

SCROLL FOR NEXT