தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சனிக்கிழமை 2ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து குறையவேயில்லை. இதனால் 2ஆவது நாளாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.