தென்காசி

கனமழை எதிரொலி: மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினமணி செய்திச் சேவை

கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 24) விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூன்று மாவட்ட ஆட்சியா்கள் இரா.சுகுமாா் ( திருநெல்வேலி), ஏ.கே. கமல்கிஷோா் (தென்காசி), க.இளம்பகவத் (தூத்துக்குடி) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை ( நவ. 24) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

இதுகுறித்து மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கனமழை காரணமாக திருநெல்வேவி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலை. துறைகளில் திங்கள்கிழமை (நவ.24) நடைபெறவிருந்த நவம்பா் பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

SCROLL FOR NEXT