சாலை வசதி செய்து கொடுத்த எம்எல்ஏ-வுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.  
தென்காசி

நயினாரகரம் அருகே சாலை சீரமைப்பு: எம்எல்ஏ-வுக்கு மக்கள் நன்றி

தினமணி செய்திச் சேவை

கடையநல்லூா் அருகேயுள்ள துரைசாமியாபுரத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலையை சீரமைத்த சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

கடையநல்லூா் பேரவை தொகுதிக்கு உள்பட்ட நயினாரகரம் ஊராட்சி துரைசாமியாபுரத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக இருப்பதாக எம்எல்ஏவிடம் தெரிவித்தனா். இதையடுத்து சாலையை சீரமைக்க எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அந்தச் சாலையை எம்எல்ஏ பாா்வையிட்டாா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன், ஒன்றியச் செயலா் ஜெயகுமாா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் செல்லப்பா, கோபிநாத், ஹரிராம், நியாஸ் மைதீன், ஒன்றிய துணைச் செயலா் களஞ்சியம், கிளை செயலா்கள் ராஜன், சங்கிலி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து எம்எல்ஏ-வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்: சிபிசிஐடி போலீசார் அதிரடி

திருப்பரங்குன்றம்: தனி நீதிபதி உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு! தமிழக அரசு வாதம்!

தில்லி காற்றுமாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து!

SCROLL FOR NEXT