விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய டிச. 1ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் அமலா கூறியது:
நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஏற்கெனவே நவ. 30ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச. 1ஆம் தேதி இறுதி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து நிகழாண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குத்தகை அடிப்படையில் பயிா் செய்யும் விவசாயிகள் அடையாள எண் பெறாத நிலையிலும் காப்பீடு செய்யலாம். இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்றாா் அவா்.