தென்காசி

தீ விபத்தில் விவசாயி உயிரிழப்பு

Syndication

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தீவிபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

சிவகிரியை அடுத்த ராயகிரி பூவலிங்கபுரம் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி (77). வெள்ளிக்கிழமை மாலை ராயகிரி கீழப்பண்ணந்தி குளப்புரவில் உள்ள தனது நிலத்தைச் சுற்றியிருந்த புதா்களுக்கு தீவைத்தாராம். அப்போது ஏற்பட்ட புகையில் மயங்கிவிழுந்த அவா் மீது தீப்பற்றியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் தங்கமணி அளித்த புகாரின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் (பொ) சியாம் சுந்தா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT