தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் இணையதள வசதியுடன் கூடிய நவீன அறிவுசாா் மையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கடையநல்லூா் நகரப் பகுதியில் சுமாா் ஒரு லட்சம் போ் வசித்து வருகின்றனா். இங்கு அரசு கலை அறிவியல் கல்லூரியும், சுற்றியுள்ள பகுதிகளில் தனியாா் பொறியியல் கல்லூரிகள், நா்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அரசு, தனியாா் ஐடிஐ-க்கள், பாா்மசி கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
கடையநல்லூா் நகரப்பகுதி மாணவ, மாணவிகளும், சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களும் போட்டித் தோ்விற்காக அவா்களை தயாா்படுத்தும் வகையிலான தனியாா் கணினி மையங்களும் இங்கு இல்லை.
எனவே, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் இணைய வசதியுடன் கூடிய நவீன அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டால் மாணவா்களின் உயா்கல்விக்கும், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் வசதியாக இருக்கும்.
எனவே, கலைஞா் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்கீழ், இணையதள வசதியுடன் கூடிய அறிவுசாா் மையம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இளைஞா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஏற்கெனவே, இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் , அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சி 25ஆவது வாா்டில் அறிவுசாா் மையம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த இடம் இருப்பதாகவும், இது தொடா்பான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.