ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு அடிக்கல்
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:46 PM
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் 14 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், ரூ. 4.76 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்ட வியாழக்கிழமை பூமிபூஜையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும் அறை, நிலைய அலுவலருக்கானஅறை, கட்டுப்பாட்டு அறை, பணிபுரியும் அலுவலா்களுக்கான ஓய்வறை உள்ளிட்டவை இடம்பெறும். நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலா் மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மாவட்ட உதவி அலுவலா் சுரேஷ் ஆனந்த், ஆலங்குளம் நிலைய அலுவலா் விஜயன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, தீயணைப்பு நிலைய வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.