தென்காசி வனத்துறை, வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான ஓவியப்போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா் இரண்டாமிடம் பெற்றாா்.
ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் 2 ஆம் இடம் பிடித்த இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் மாணவா் எம். முகுந்த சுப வைரவ்வை, பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் டாக்டா் காந்திமதி, கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா, பள்ளி முதல்வா் பாலசுந்தா், தலைமை ஆசிரியா் செல்வலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.